Stay Safe Stay Connected!!! Now recharge your Mobile anytime when you visit your nearest bank ATM
கோரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மத்திய அரசால் வரும் ஏப்ரல் 14வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மொபைல் ரீசார்ஜ் செய்யும் கடைகள் எதுவும் இல்லை. ஆன்லைன் மூலமாக ரீசார்ஜ் செய்ய தெரியாதவர்கள் உங்களது மொபைல் எண்ணிற்கு ATM மெஷின் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரியுமா?
வாங்க.. ஈஸியா எப்படி உங்களது மொபைல் நம்பரை ATM மெஷினில் ரீசார்ஜ் செய்வது எப்படினு இந்த பதிவில் பார்க்கலாம்.முதலில் உங்கள் அருகாமையில் உள்ள ATM மெஷின் இருப்பிடத்திற்கு செல்லுங்கள்.
உங்கள் ATM கார்டை மெஷின் செருகுங்கள். இப்போது "ரீசார்ஜ் (Recharge)" என்ற விருப்பத்தை தேர்வு செய்யுங்கள். நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய எண்ணை உள்ளிடுங்கள்.
இப்போது மெஷின் உங்கள் 4 இலக்க PIN நம்பரை உள்ளிட சொல்லி கேட்கும். அப்போது PIN நம்பரை உள்ளிடுங்கள்.
அடுத்து, நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய பண மதிப்பை உள்ளிடுங்கள். MyJio ஆப் மூலம் சரியான ரீசார்ஜ் எண்ணை தான் உள்ளிடுகிறோமா என்று ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
சரிபார்த்துவிட்டு உறுதி செய்ய ENTER பொத்தானை அழுத்துங்கள். இப்போது ATM மெஷின் திரையில், ரீசார்ஜ் மெசேஜ் தோன்றும் மற்றும் நீங்கள் குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கில் இருந்து எடுக்கப்படும் என்று காண்பிக்கும்.
ரீசார்ஜ் வெற்றிகரமாக ஆகியிருந்தால் நீங்கள் ரீசார்ஜ் செய்த எண்ணிற்கு மெசேஜ் வரும்.அவ்வளவுதான், ATM மெஷின் மூலம் உங்கள் ரீசார்ஜ் வெற்றிகரமாக முடிந்தது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி