தேர்வை நிறுத்தி வைக்கவும் இல்லை என்றால் வகுப்பறையில் பயிற்சி வழங்க அனுமதி கொடுக்கவும் - ஆசிரியர்கள் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2020

தேர்வை நிறுத்தி வைக்கவும் இல்லை என்றால் வகுப்பறையில் பயிற்சி வழங்க அனுமதி கொடுக்கவும் - ஆசிரியர்கள் கோரிக்கை!

கொரோனா வைரஸ் பாரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூடவும் , 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடைபெறும் எனவும் அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் மாணவர்களுக்கு மட்டுமே விடுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கல்வி தொடர்பான பணிகளை செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

அதனால் மாணவர்கள் இன்றி ஆசிரியர்கள் மட்டும் தினமும் பள்ளி வந்து செல்கின்றனர்.

தேர்வு நடைபெறும் நேரத்தில் பயிற்சி இன்றி மாணவர்கள் எவ்வாறு தேர்வை எதிர்கொள்வார்கள் என்ற கவலையில் ஆசிரியர் ஒருவரது பதிவு இது!

" ஒவ்வொரு ஆசிரியருக்கும்  தன்னுடைய உயிரை விட அவர்களுடைய மாணவர்கள்  நல்ல மார்க் எடுத்து  நல்ல நிலையில் வருவது தான் விருப்பம் அதை தான் விரும்புவார்கள் ஆனால் 11th 12 மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத சென்றால் எப்படி மார்க் வரும் அதும் accountancy தேர்வு என்பது ஆசிரியர் துணை இல்லாமல் கண்டிப்பா எழுதவே முடியாது  இதை கவனத்தில் கொண்டு ஒன்று தேர்வை நிறுத்தி வைக்கவும் இல்லை என்றால் வகுப்பறையில் பயிற்சி வழங்க அனுமதி கொடுக்கவும் இதை அரசு கவனத்தில் எடுக்குமா??????"

11 comments:

  1. no coaching friday exam that only i will badly write the exam

    ReplyDelete
  2. அருமை குருநாதரே. தங்களின் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பயிற்சி அவசியம். கடைசி நாள் வரையிலும் தேவையா ??
    பாடங்கள் அனைத்தும் சொல்லிக் கொடுத்து விட்டோம்.
    இனி மாணவர்கள் புரிந்து செயல் படும் நேரம்.
    ரொம்பவே spoon feeding தேவையில்லை.
    தேர்வே வேண்டிய தில்லை. All Pass போட்டு அனுப்பி விடுங்கள்.
    NEET, JEE,CET தேர்வுகள் வேண்டாம் எனும் போது 10_12 பொது தேர்வுகள் கூட வேண்டாம். விரய செலவு. All Pass.

    ReplyDelete
  4. முட்டாள்தனமான கோரிக்கை

    ReplyDelete
  5. இவ்வளவு நாள் கிளிக்காம இப்ப கிளிக்கராங்களாம் போய் அரசு சொல்லர மாதிரி வீட்டுல முடங்கி கிடங்க

    ReplyDelete
  6. ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் மெல்லக் கற்கும் மாணவர்களை முன்னமே இனம் கண்டு பயிற்சி அளித்திருக்க வேண்டும். இறுதியாக அல்ல.மாணவர்களின் உண்மையான திறமை வெளிப்படுத்தும் நேரம் இது. கடைசி வரை ஆசிரியர்கள் ஏன் அலட்டிக் கொள்கிறார்கள். மாணவர்கள் கற்றலில் பெற்றோர்களின் பங்கைப் புரிய வைங்கள்

    ReplyDelete
    Replies
    1. தற்போதும் நேரம் சென்றுவிட வில்லை... மெல்லக்கற்கும் மாணவர்களில் 5 பேருக்காவது அவர்களின் வீடுகளுக்கு சென்று தலா 1 மணி நேரம் பயிற்சி அளிக்கலாம்.... செய்வீர்களா??? ஏனென்றால் இத்தனை நாளாக உங்கள் உயிரைவிட மாணவர்களின் நலனுக்காகவே (?) உழைத்துள்ளீர்கள்.. ஆகையால் இதையும் செய்யலாமே....


      நாடு இருக்கும் சூழலில் உங்கள் வேடத்திற்கு குறைவில்லை....

      Delete
  7. Teachers jobs are to teach them concepts and make them understand contents clearly, apart from that we may conduct exams tests assessments etc. But studying is the duty of a student. We can not sit always behind their back to study. They can come and ask doubt at anytime, for that no restrictions, but simply sitting along with them to spoon feed is a bad practice. Only private schools follow those bloody shits. That too just satisfy the parents.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி