கோவையில் மாணவிக்கு கொரோனா பாதிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2020

கோவையில் மாணவிக்கு கொரோனா பாதிப்பு!


ஸ்பெயினில் இருந்துவந்தகோவை மாணவிக்கு கரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது . இதை அடுத்து , தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது .

ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோ தனையில் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி . விஜயபாஸ்கர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் .

 இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது : கோயம் புத்தூரை சேர்ந்த 25 வயதுமாணவி , ஸ்பெயின் நாட்டில் இருந்து கடந்த 13 - ம் தேதி கோவை வந்தார் . இந்த சூழலில் , ஸ்பெயினில் அவரு டன் இருந்த தோழிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது .

 இத்தகவலை அறிந்த கோவை மாணவி கடந்த 18 - ம் தேதி பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவ மனைக்கு வந்தார் . அவரை மருத்துவமனையில் அனுமதித்த டாக்டர்கள் , அவரது ரத்த மாதிரிகளை எடுத்து 19 - ம் தேதிபரிசோதனைக்கு அனுப்பினர் . பரிசோதனை முடிவில் , அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப் பது உறுதி செய்யப்பட்டது .

 இதை யடுத்து , அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் , உறவினர் கள் , நண்பர்கள் அனைவரையும் கண்காணித்து வருகிறோம் . அவர் களுக்கு பரிசோதனை செய்யப் பட்டு வருகிறது என்றனர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி