ஜாக்டோ ஜியோ - முதல்வருடன் சந்திப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2020

ஜாக்டோ ஜியோ - முதல்வருடன் சந்திப்பு!

திருவாரூரில் தமிழக முதல்வருடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் சந்திப்பு. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தல். 

திருவாரூர் வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமியை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அதனுடைய பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் தலைமையில் கூட்டணி நிர்வாகிகள் சந்தித்தனர்.

அப்போது காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

மேலும் கடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். அதுபோல் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களை மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதற்கு வழங்கப்படும் அரசின் நிதிஉதவியை நிறுத்தி, அந்நிதியினை கொண்டு அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட முதல்வர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

1 comment:

  1. அடுத்த ஆண்டு தேர்தல்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி