தேர்வு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி புதிய தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2020

தேர்வு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி புதிய தகவல்!


குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் , ஊரடங்கு காரணமாக தேர்வு குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறிவித்துள்ளது .

இது தொடர்பாக , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
( டிஎன்பிஎஸ்சி ) இன்று ( ஏப் . 7 ) வெளியிட்ட அறிவிப்பில் ,

 " தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 09 . 12 . 2019 நாளிட்ட அறிவிக்கை எண் 34 / 2019 இல் 25 . 04 . 2020 மற்றும் 26 . 04 . 2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவித்திருந்த , தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் , குறு , சிறு
மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனத்தில் , உதவி இயக்குநர் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வானது , கரோனா வைரஸ் பரவலால் கடைப்பிடிக்க வேண்டிய சமூக விலகல் காரணமாகவும் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது . தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி