தமிழகத்தில் ஊரடங்கினை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்குமாறு முதல்வர் இபிஎஸ்.,க்கு டாக்டர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்னும் 4 நாட்களில் முடிய இருக்கிறது. ஆனால், பல மாநிலங்கள் ஊரடங்கினை மேலும் நீட்டிக்க பரிந்துரைத்ததாக பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவுடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார்.அப்போது, தமிழகத்தில் ஊரடங்கினை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என டாக்டர்கள் குழு, முதல்வர் இபிஎஸ்.,க்கு பரிந்துரை செய்துள்ளது.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய டாக்டர்கள் குழுவில் இடம்பெற்ற டாக்டர் பிரதீபா கூறியதாவது:
அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது. ஏப்., 14க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.நாளை அமைச்சரவை கூட்டம் இதனிடையே, நாளை (ஏப்.,11) முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை (ஏப்.,11) ஆலோசனையில் ஈடுபடுகிறார். அதன்பின்னர், ஊரடங்கு நீட்டிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி