ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறைகளில் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2020

ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறைகளில் மாற்றம்


பத்திரப்பதிவுக்கான டோக்கன் எண்ணிக்கையை குறைக்க, ஆன்லைன் திட்டத்தில், சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், வரும், 20ல் பத்திரப்பதிவு பணிகளை துவங்க, பதிவுத்துறை தயாராகி வருகிறது.

தமிழகத்தில், மொத்தம் உள்ள, 575 சார் பதிவாளர் அலுவலகங்களில் முதற்கட்டமாக, 50 சதவீத அலுவலகங்கள், 20ம் தேதி முதல் இயங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, பணியாளர்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆன்லைன் பத்திரப்பதிவு இணையதளத்தில், சில மாறுதல்கள் செய்யப்பட உள்ளன. குறிப்பாக, ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில், ஒரு நாளைக்கு, 25 பத்திரங்களை மட்டுமே, பதிவுக்கு அனுமதிக்கும் வகையில், டோக்கன் எண் ஒதுக்கப்படும்.அதிலும், ஒரு மணி நேரத்துக்கு நான்கு பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யும் வகையில், மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆன்லைன் பத்திரப்பதிவு இணையதளத்தில், இதற்கான மாற்றங்கள் செய்வது குறித்து, உயரதி காரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி