TNPSC தேர்வுகள் எப்போது நடைபெறும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2020

TNPSC தேர்வுகள் எப்போது நடைபெறும்?


கரோனா நோய்த் தொற்று காரணமாக , குரூப் 1 உள்ளிட்ட அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முக்கிய தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன . இந்தத்
தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று தேர்வர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக , தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது . இந்த நிலையில் , ஒவ்வொரு ஆண்டும் மாதந்தோறும் குறைந்தது
ஓர் அரசுத் துறைக்காவது பணியாளர்களைத்  தேர்வு செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

 எந்தெந்த தேர்வுகள் : குரூப் 1 முதல்நிலைத் தேர்வானது ஏப்ரல் 5 - ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது . இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இதேபோன்று , சிவில் நீதிபதி கள் பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு மார்ச் 28 , 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவ தாக இருந்தது . இந்தத் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது . குரூப் 4 தொகுதியில் தட்டச் சர்கள் , சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவியிடங்களுக்கு சான் றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணி கள் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 7 - ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

ஒருங்கிணைந்த பொறியியல் பிரிவுபதவியிடங்களில்சான்றிதழ் சரிபார்ப்பு , தமிழ்நாடு தொழிற் சாலைப் பணிகளில் உதவி இயக் குநர் , உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவியிடங்களுக்கு தேர் வும் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது . இந்தத் தேர்வுகள் அனைத்தும் கரோனா வைரஸ் பாதிப்பு கார ணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

முடிவுகள் எப்போது : இதே போன்று , கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மூன்று முக்கிய தேர் வுத் தேர்வுகள் நடத்தப்பட்டன . உதவிப் பிரிவு அலுவலர் ( மொழி பெயர்ப்பு ) , கால்நடை உதவி மருத் துவர் , தொல்லியல் துறை அலுவ லர் ஆகிய பதவியிடங்களுக்குதேர் வுகள் நடத்தப்பட்டன . ஆனால் , இந்த தேர்வுகளுக்கான முடிவு களும் , கட் - ஆப் மதிப்பெண்க ளும் இதுவரை வெளியிடப்பட வில்லை . இதனால் , தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது . மேலும் , தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளும் எப்போது நடத்தப் படும் என்று தேர்வர்கள் வினா எழுப்புகின்றனர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி