ஜூன் இறுதி வாரத்துக்கு தள்ளிப் போகிறது பள்ளிகள் திறப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2020

ஜூன் இறுதி வாரத்துக்கு தள்ளிப் போகிறது பள்ளிகள் திறப்பு?


தமிழகத்தில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

ஒரு மாதத்துக்கும் மேலாக, பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்டால், 10ம் வகுப்பு தேர்வு, பிளஸ் 1ல் விடுபட்ட தேர்வுகளை நடத்த வேண்டும். பின், விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்; தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும். இந்த பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடவேண்டும் என்பதால், ஜூன் முதல் வாரத்தில், பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டது.

அது சாத்தியமில்லை என்பதால், எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தற்போது, நிலைமை கட்டுக்குள் வரும் வரை, பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கலாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவிலான முடிவுக்கு ஏற்ப, பள்ளி திறப்பை, ஜூன் இறுதி வாரத்துக்கு தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. School reopening will be on August.. before no chance..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி