பள்ளிக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கைக்கு மாறாக குழுக்கள் அமைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2020

பள்ளிக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கைக்கு மாறாக குழுக்கள் அமைப்பு.


பொதுத்தேர்வு குறித்து மாண வர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க மாவட்டவாரியாக ஆலோசனை குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘பத்தாம் வகுப்பு தேர்வு நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடைபெற உள்ளதால் மாணவர்கள் தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ள சந்தேகங்களை களையவேண்டியது அவசியமாகும்.அதனால் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங் களிலும் தலா ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் 4 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்தி, மாணவர்களின் சந்தேகங்களை சரிசெய்து ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

சுற்றறிக்கைக்கு மாறாக...

அதேநேரம் கல்வித்துறையின் சுற்றறிக்கைக்கு மாறாக 2 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தலா ஒரு முதுநிலை , பட்டதாரி ஆசிரியர் கொண்ட குழுக்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு வருவதாக துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி