பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பான பணிக்கு 18 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழு அமைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2020

பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பான பணிக்கு 18 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழு அமைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பான பணிக்கு 18 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் நடிமுறையில் இருந்து வரும் பாடத்திட்டங்களை குறைக்க கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய 18 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வரும் கல்வியாண்டில் பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பாக நான்கு கல்வியாளர்கள் மற்றும் கல்வி துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என 18 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த குழு ஆய்வு செய்து அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய சூழலில்மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை என்றும், முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு இந்த முடிவை உரிய நேரத்தில் எடுக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Teachers salary problem - kuzhu amaika padum.
    Teachers posting- kuzhu amaika padum.
    2013 tet exam case- kuzhu amaika padum.
    Part time Teachers permanent- kuzhu amaika padum.
    10th exam - kuzhu amaika padum.
    Neet exam - kuzhu amaika padum.
    School re open in corona time- kuzhu amaika padum.
    Students subject syllabus reduce reg- kuzhu amaika padum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி