
மருத்துவ வல்லுநர்கள் நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவித்துள்ளதாலும் , பெற்றோர்களின் கோரிக்கைகளையும் , நோய்தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு , மாணவர்களை நோய்த் தொற்றிலிருந்து காக்கும் பொருட்டு அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது .
( i ) 2019-20ஆம் கல்வியாண்டில் , 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11 ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் ( புதிய பாடத்திட்டம் ) , வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் , தொழிற்கல்வி கணக்கு பதிவியல் ( பழைய பாடத்திட்டம் ) ஆகியவற்றிற்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது .
( ii ) இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் 10 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகின்றனர் .
( ii ) மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20 சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்படும் .
( iv ) 12 ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே 24.03.2020 அன்று நடைபெற்ற தேர்வினை எழுதாத மாணவர்களுக்காக நடத்தப்படவிருந்த மறுதேர்வு ஒத்திவைக்கப்படுகிறது . மேலும் , சூழ்நிலைக்கேற்ப 12 ம் வகுப்பிற்கான மறுதேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் .
( ஆளுநரின் ஆணைப்படி )
தீரஜ் குமார்
அரசு முதன்மைச் செயலாளர் .
Marks was very low
ReplyDeleteMy daughter feeling bad
Please change the schedule
New books so student can't understand easily got lowest marks parents ask gov please condu the public exam
ReplyDelete