ஆசிரியர்கள் இன்று முதல் பள்ளிக்குவர வேண்டும் கல்வித்துறை உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2020

ஆசிரியர்கள் இன்று முதல் பள்ளிக்குவர வேண்டும் கல்வித்துறை உத்தரவு!


கல்வித்துறை சார்பில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும்போது 8-ந்தேதி முதல்(இன்று) மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பெற்றுள்ள 2 முக கவசங்களை வழங்க வேண்டும். 3-வது முக கவசம் வருகிற 19-ந்தேதி வழங்க வேண்டும். பொதுத்தேர்வு மைய பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்பு நிலை ஆசிரியர்கள் 8-ந்தேதி (இன்று) முதல் பள்ளிக்கு வர வேண்டும். மொத்த மாணவர்களின் எண்ணிக்கையும் 8-ந்தேதி ஹால்டிக்கெட் பெற்று சென்ற மாணவர்களின் எண்ணிக்கையையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி