மேலும் 47 சீன ஆப்களுக்கு தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2020

மேலும் 47 சீன ஆப்களுக்கு தடை


சீனாவில் இருந்து செயல்படும், 59 மொபைல் செயலிகளுக்கு, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக, 47 செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, சீனாவைச் சேர்ந்த, 250 செயலிகளின் பட்டியலும், தயாராகி வருவதாக தெரிகிறது.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை மோதலாக மாறியது. எல்லையில் நடந்த மோதலில், நம் ராணுவத்தின், 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதையடுத்து, 'சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

சீனாவைச் சேர்ந்த, மொபைல் செயலிகள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், தகவல்கள் திருடப்படுவதாகவும் கூறப்பட்டது. அதையடுத்து, 'டிக்டாக்' உட்பட, 59 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த, மேலும், 47 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட செயலிகளின் மறுவடிவமாக இருந்தவை. இது குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இவற்றைத் தவிர, சீனாவைச் சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட செயலிகள் குறித்த தகவல்கள் ஆராயப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக இருக்கும்பட்சத்தில், இவற்றுக்கும் தடை விதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி