அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவுக்கு, இன்றே கடைசி நாள்.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், ஜூலை, 16ல் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பில், மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூலை, 20ல் துவங்கியது. விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு, இன்றே கடைசி நாள். இதுவரை, 2.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர், ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். விண்ணப்பப் பதிவு காலத்தை, இன்னும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.இதற்கிடையில், விண்ணப்பங்களை பதிவு செய்த மாணவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களின் ஒளிப்பதிவுகளை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம், நாளை துவங்க உள்ளது.
வரும், 10ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.கூடுதல் விபரங்களை, http://tngasa.in/ என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி