அரசு கல்லூரிகளில் மதிய உணவு திட்டம் - தெலுங்கானா அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2020

அரசு கல்லூரிகளில் மதிய உணவு திட்டம் - தெலுங்கானா அரசு அறிவிப்பு.


தெலுங்கானாவில் அரசு கல்லூரியில் படிக்கும் இளநிலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.


@@நேற்று நடந்த உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் சந்திரசேகரராவ் அளித்த பேட்டியில், மாநிலத்தில் இந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு கல்லூரியிலும் இளநிலை மணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக அரசு கல்லூரிகளில் படிக்கும் இளநிலை மாணவர்கள் மதிய உணவு நேரம் முடிந்ததும் மீண்டும் வகுப்புகளுக்கு வராமல் திரும்பி செல்கின்றனர். இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தபடுவதன் மூலம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். மேலும் மாநில முழுவதும் அரசு கல்லூரி வளாகங்களில் தாவரவியல் பூங்கா அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி