அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ( தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை ) தலைமையாசிரியர்கள் , தங்கள் பள்ளியில் உள்ள கடைசி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ( 5,8,10,12 ) மற்றும் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கும் மா ற் றுச்சான்றிதழ் கொடுப்பதற் கான அனைத்து விவரங்களையும் EMIS வலைதளத்தில் Students Students TC details வழியாக மாணவர்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்த பின்னரே Save கொடுக்கப்படவேண்டும் . Save கொடுக்கப்பட்ட பிறகு தவறுகள் இருப்பின் திருத்தம் செய்ய இயலாது என்பதை தெரிவிக்கப்படுகிறது . ஆகவே உள்ளீடு செய்யப்பட்ட விவரங்கள் சரியாக இருப்பதை தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்த பின்னரே Save கொடுக்கப்படவேண்டும் . மாணவர்களை Common Pool க்கு மாற்றும் பொழுது மாற்றுச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்தகவலை அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் முறையாக தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மதிப்பிற்குரியவர்களே, வணக்கம்.
ReplyDelete1.அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது செய்ய என்ன வழி. அரசு வழிகாட்டுதல் என்ன?
2.அரசு அரசு உதவிபெறும் பள்ளிகள் முற்றிலும் பூட்டப்பட்டுள்ளது ஒரு ஆபீஸ் அறையாவது திறந்தால்தானே மாணவர் சேர்க்கை மற்றும் மாற்று சான்றிதழ் பெறமுடியும். அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கு ஒருவர் கூட சேரவில்லை. ஆனால் தனியார் பள்ளிகளில் சேர்வது தடையில்லாமல் தொடர்கிறது அவர்கள் ஒரு அறையாவது திறந்து மற்றும் ஆன்லைன் மூலமாக மாணவர் சேர்க்கை செய்து வருகிறார்கள்.
3.EMIS பதிவு செய்ய தற்போது அரசு உத்தரவிட்டுள்ளதா ?EMIS பதிவு செய்யலாம் என்றால் மாணவர் சேர்க்கை செய்யலாமா ?அரசு வழிகாட்டுதல் என்ன ?மாற்று சான்றிதழ் யாரிடம் பெறுவது அரசு அரசு உதவிபெறும் பள்ளிகள் பூட்டப்பட்டுள்ளது அரசின் வழிகாட்டுதல் என்ன ?எவ்வாறு பெற்றோர் tc பெறுவது ?
R. ஜேம்ஸ் பிரபாகரன்