10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 5,248 பேருக்கு வரவில்லை ஏன்?… விளக்கம் அளித்துள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2020

10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 5,248 பேருக்கு வரவில்லை ஏன்?… விளக்கம் அளித்துள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம்!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஆக.10) வெளியானது. இதில் 100% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் 5,248  பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என கூறப்பட்டது.


இதுத்தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “5,248 மாணவர்களில் 231 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த பின் இயற்கை மரணமடைந்து விட்டனர். மாற்றுச்சான்றிதழ் பெற்று பள்ளியை விட்டு 658 மாணவர்கள் இடையிலேயே நின்று விட்டனர். காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும் பள்ளிகளுக்கு 4,359 மாணவர்கள் முழுமையாக வரவில்லை” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே 10 ஆம் வகுப்பு தேர்வில் 4,71,759 மாணவர்களும் 4,68,070 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளதன் மூலம் 9,39,829 பேர் தேர்ச்சி பெற்றதாக  அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் 6,235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி