கலை, அறிவியல் படிப்பில் ஆர்வம் 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2020

கலை, அறிவியல் படிப்பில் ஆர்வம் 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் விண்ணப்பம்


கலை, அறிவியல் படிப்பு மீதான ஆர்வத்தால் தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இருக்கும் 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த கல்லுாரிகளில் சேர ஜூலை 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டது. இறுதிநாளான ஜூலை 31 வரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்கள் பதிவேற்ற ஆக.,5 கடைசி நாளாக இருந்த நிலையில் எதிர்பார்த்ததை விட அதிகமானோர் விண்ணப்பித்ததால் சர்வர் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் ஆக.,10 வரை சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் ஆக.15க்குள் சரிபார்ப்பு செய்து கட்-ஆப் அடிப்படையில் சீட் வழங்கப்படும். சீட் கிடைத்த விபரங்கள் மாணவர்களுக்கு அலைபேசி, இ-மெயில் மூலம் தெரிவித்து ஆக.20க்குள் அட்மிஷன் நடத்தப்பட உள்ளது. இம் மாதத்திலேயே ஆன்-லைன் வகுப்புகள் துவங்க உள்ளதாக உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி