ஆன்லைன் கல்வி; தமிழக மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2020

ஆன்லைன் கல்வி; தமிழக மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி



ஆன்லைன் கல்வி முறையில் இனி ஒரு உயிர் கூட போகாத அளவுக்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஸ்மார்ட்போன் இல்லை என்ற விரக்தியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.கோவையிலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது.

இதற்கிடையே ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம் அருகே கொடிவேரி அணையில் இருந்து பாசனப் பகுதிகளுக்கு இன்று நீர் திறந்து விடப்பட்டது. அப்போது அணையின் ஷட்டரை உயர்த்தி, அமைச்சர் செங்கோட்டையன்  தண்ணீரைத் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ''தமிழக அரசு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. இரண்டு இடங்களில் நடைபெற்ற மரணம் குறித்து அரசு ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற தவறுகள் ஏற்படக் கூடாது.
தமிழ்நாட்டில் ஒரு குழந்தையின் உயிர் கூடப் போகாத அளவுக்கு நம் முதல்வர் அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் முழு பாதுகாப்பு அளிக்கப்படும்'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

1 comment:

  1. Part time teacher ku indha month salary koduthu irrukinga thanks...pavam tet la pass pannitu niraiya peru vala vali illama enga meedhu porumaiya irrukanga avanga subject vera enga subject vera idhiya purichukadha avangaluku puriya vatchu avangaloada valvadharatha kapatrungal..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி