ஆசிரியர் குற்ற பின்னணி ஆய்வு செய்ய உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2020

ஆசிரியர் குற்ற பின்னணி ஆய்வு செய்ய உத்தரவு.

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்களுக்கு, குற்றவியல் பின்னணி உள்ளதா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, நாடு முழுதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, மத்திய - மாநில அளவில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.மாநில அரசின் விருதுக்கு பிறகும், சிறப்பாக செயல்படுவோருக்கு, மத்திய அரசின் விருது பரிந்துரை செய்யப்படுகிறது. 


இந்த ஆண்டு, விருது பெறுவோருக்கான தகுதி பட்டியலை, மத்திய - மாநில அரசுகள் தயார் செய்துள்ளன.இந்த பட்டியலில் உள்ள ஆசிரியர்களை இறுதி செய்யும் முன், அவர்களுக்கு குற்றவியல் பின்னணி உள்ளதா என, ஆய்வு செய்யுமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும், போலீஸ் வழியாக, நல்லாசிரியர் பட்டியலில் உள்ளவர்களின் தகுதியையும், அவர்கள் மீது வழக்குகள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்யுமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி