செப்டம்பர் இறுதிக்குள் கல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது.
பல்கலைக்கழக மானியக்குழு இன்று தனது வாதத்தை முன்வைக்கையில், கல்லூரி இறுதித் தேர்விற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்; தேர்வு எழுதாமல் பட்டம் பெற முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
யூஜிசியின் உத்தரவுகளை மீறி கல்லூரித் தேர்வுகளை மாநில அரசுகள் தேர்வை ரத்து முடியாது என்றும் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநில அரசுகளின் கல்லூரி தேர்வு ரத்து அறிவிப்புகள் விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதாக யூஜிசி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க யூஜிசிக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி