பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் வகுப்புகளை நடத்த அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2020

பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் வகுப்புகளை நடத்த அட்டவணை வெளியீடு.

அண்ணா பல்கலைக்கழகம் நடப்பு செமஸ்டர் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துவதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் செயல்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் வரும் 12-ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகளை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 12-ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. செமஸ்டர் வகுப்புகளை அக்டோபர் 26-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். செய்முறை வகுப்புகளை அக்டோபர் 28-ல் தொடங்கவும், பருவத் தேர்வுகளை நவம்பர் 9-ம் தேதிக்குள் முடிக்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


டிசம்பர் 14-ம் தேதி நடப்பாண்டின் இரண்டாவது செமஸ்டர் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


மேலும் மற்ற ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் மற்றும் இண்டர்னல் மதிப்பெண் முறையில் தேர்ச்சி வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி