DSE - மாணவர் சேர்க்கையில் நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு சட்டவிதிகள் பாடப்பிரிவு வாரியாக பள்ளிக் கல்வித்துறை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2020

DSE - மாணவர் சேர்க்கையில் நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு சட்டவிதிகள் பாடப்பிரிவு வாரியாக பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.

மேற்கண்ட அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு மாணவர் சேர்க்கையின்போது பொதுப்பிரிவினர்க்கான 31 % இடத்திற்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கிடவும் , பொதுப்பிரிவினர் , ஆதி திராவிடர் , பழங்குடியினர் , பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற எவ்வித பாகுபாடின்றி தயாரித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது . அதன் பின்னர் அந்தந்த பிரிவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.


மாநிலத்தின் அதிகாரவரம்பிற்குள் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளிலும் ( சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக ) பாடப் பிரிவு வாரியாக ( Group - wise ) மேற்கூறப்பட்ட விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. அனைத்துப் பள்ளிகளுக்கும் இச்செயல்முறை ஆணையினை அனுப்பி ஒப்பம் பெற்று தங்கள் கோப்பில் வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் . மேலும் , மேற்கூறியவாறு அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

  1. சிறுபான்மையினர் பள்ளிகள், இந்திய அரசிலமைப்பு சட்டத்துக்குள் வருவது இல்லையா? தெரிந்தவர்கள் தெரிய படுத்தவும், காரணம் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாமலே,இப்பள்ளிகளில் பணி நியமனம் பெறுகின்றனர், அரசு ஊழிர்களுக்கு சமமான ஊதியம் பெறுகின்றனர், அதுவும் அரசே ஊதியம் வழங்குக்கிறது. ஆனால் சுமார் 90ஆயிரம் பட்டதாரிகள் tet தேர்ச்சி பெற்று பணி இல்லாமல் காத்து கிடக்கின்றனர், சிறுபான்மையினர் பள்ளியின் விதிகளை தெரிந்தவர்கள் கூறுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி