NEET 2020 - செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் - தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2020

NEET 2020 - செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் - தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை!

நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து, தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை.


நீட் தேர்வு எழுதுவதற்காக இதுவரை 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் பதிவு செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தனது அட்டவணையில் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை காரணமாக வைத்து முதன்முறையாக ஐந்து முறை தேர்வு எழுதக்கூடிய நபர்களுக்கு ஐயத்தை நீக்கி தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமைவெளியிட்டுள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் நீட் தேர்வுக்கான நுழைவு அட்டைகளும் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும், 99.7 சதவீதம் தேர்வர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்டு தேர்வு செய்த மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வர்களுக்கு கிருமிநாசினி, முகக்கவசம், கையுறை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் தேர்வு நேரத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு விரிவான கடிதம் எழுதப்பட்டு உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி