பள்ளிக்கல்வி செயலர் கூட்டம் 2 ம் முறையாக தள்ளிவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2020

பள்ளிக்கல்வி செயலர் கூட்டம் 2 ம் முறையாக தள்ளிவைப்பு.


மாவட்ட சி.இ.ஓ.க்களுடனான பள்ளி கல்வி செயலரின் கூட்டம் இரண்டாம் முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது . Sgta group தமிழக பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாறுதல் மற் றும் மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய நேற்று ஆலோசனை கூட்டம் நடப்பதாக இருந்தது . இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட சி.இ.ஓ.க்கள் டி.இ.ஓ.க்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார் . இதையடுத்து முதன்மை செயலர் தீரஜ்குமார் பங்கேற்க உள்ள கூட்டம் வரும் 1 ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக சுற்றறிக்கை அனுப்பினார் . இந் நிலையில் மீண்டும் இந்த கூட்டம் தள்ளி போடப் பட்டு வரும் 9 ம் தேதி கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது . அதனால் மாவட்ட கல்வி அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர் . அமைச்சரின் அனுமதி பெறாமல் கூட்ட தேதியை முடிவு செய்ததால் இரண்டு முறை தள்ளி போடப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி