தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையதள வசதி: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2020

தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையதள வசதி: அமைச்சர் செங்கோட்டையன்


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள மொடச்சூர் கீரிப்பள்ளம் கழிவு நீர் ஓடையை தூர்வாரும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், ஆசியர்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார்.


தனியார் பள்ளிகளில் 40 சதவீதம் தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். மேலும் தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து ,தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கையாக வைத்தால் அரசு பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், பள்ளி திறப்பு சாத்திய கூறு தற்போது இல்லை என தெரிவித்தார். மேலும், “அரசு பள்ளிகளில் 7,500 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர், தேவைப்பட்டால் தனியார் பள்ளியில் பணிபுரிந்து தற்போது வேலை இல்லாமல் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களை அரசு பள்ளிக்கு தற்காலிக பணிக்கு எடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்”இவ்வாறு தெரிவித்தார்.

5 comments:

  1. Ok sir ,ஆசிரயர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி அடைந்து எங்களை மாதிரி வாழ்வாதாரத்தை இழந்து நமக்கும் ஒருநாள் அரசுப்பணி கிடைக்கும் என்று நம்பிக்கையில்இருக்கும் எங்களுக்காக கொஞ்சம் கூட யோசசிக்காம தனியார் பள்ளி ஆசிரயர்களுக்கு சம்பளம் கிடைக்காமல் இருப்பதற்காக பரிதாப படுகிறீர்கள்

    ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற நாங்கள் என்ன தான் செய்வது

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதே ஒரு சாபக்கேடு போல்


    ரொம்ப நன்றி ஐயா

    ReplyDelete
  3. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை என்று தெரியுது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே அப்புறம் என்ன புகார் கொடுப்பது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி