வாரிசு வேலை வழங்க கோரிய வழக்கு: டிசம்பருக்குள் பணி வழங்க உயர்நீதிமன்றம் ஆணை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2020

வாரிசு வேலை வழங்க கோரிய வழக்கு: டிசம்பருக்குள் பணி வழங்க உயர்நீதிமன்றம் ஆணை!

 

கருணை அடிப்படையிலான வாரிசு வேலை கேட்டு மனு செய்தவரின் கோரிக்கையை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால், கடலூர் மாவட்ட ஆட்சியரின் ஊதியத்திலிருந்து பிடித்து செய்து மனுதாரருக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவரின் தந்தை, கிராம உதவியாளராக பணியில் இருந்த போது கடந்த, 2003ம் ஆண்டு மரணமடைந்தார். கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு ரவி அளித்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவி வழக்கு தொடர்ந்தார். 

2011ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வாரிசு வேலை வழங்க மறுத்து 2011ம் ஆண்டு பிறப்பித்த அரசு உத்தரவை ரத்து செய்தார். மனுதாரருக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அரசு பணி வழங்கவேண்டும் என்றும் அவ்வாறு வழங்கவில்லை என்றால், 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் ரவியை அரசு கடைநிலை ஊழியராக கருதி ஊதியத்தை வழங்கவேண்டும் என்றார். 

இந்த உத்தரவு அமல்படுத்தபடவில்லை என்றால் கடலூர் மாவட்ட ஆட்சியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து ரவிக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி