ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு.
நாள் : 30.09.2020
இடம் : நந்தனம் M.C ராஜா மாணவர் விடுதி
01.01.2020 அன்றைய நிலையில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு மூலம் நிரப்பிட தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
செயல்முறை ஆணையில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக தற்காலிக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நந்தனம் M.C ராஜா மாணவர் விடுதி 30.09.2020 காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளதால் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் தேர்ந்தோர் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் , மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு - கலந்தாய்வுக்கு கலந்துக்கொள்ள வரும் ஆசிரியர்கள் கட்டாயமாக முகக்கவசம் , அடையாள அட்டை அணிந்து வர வேண்டும் . மேலும் , சமூக இடைவெளியை பின்பற்றியே இருக்கையில் அமரவேண்டும் , கலந்தாய்வில் கலந்துக்கொள்ள வரும் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி