ஜிப்மரில் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2020

ஜிப்மரில் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை

 


புதுவை ஜிப்மரில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவே நடத்தும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்தது.


புதுச்சேரி, காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு, மருத்துவக் கல்வி பயில ஜிப்மர் நிர்வாகம் தனியாக நுழைவுத் தேர்வை நடத்தி, அதன் மூலம் மாணவர்கள் சேர்க்கையை நடத்தி வந்தது.

நிகழாண்டு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்தது.


இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான (2020) மாணவர்கள் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவே நடத்தும்.


எனவே, நிகழ் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புக்குத் தனித் தேர்வோ, கலந்தாய்வோ ஜிப்மர் சார்பில் நடத்தப்படாது. மாணவர்கள் கூடுதல் விவரங்களை   http://www.mcc.nic.in/ என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி