10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு: இரு மாதங்கள் தள்ளி வைக்க திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2020

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு: இரு மாதங்கள் தள்ளி வைக்க திட்டம்


தமிழக பாட திட்டத்தில்10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை இரு மாதங்கள் தள்ளிவைக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


*♦💲♦கொரோனா பரவல் காரணமாக 2019 - 20ம் கல்வி ஆண்டில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வை நடத்த முடியாமல் பெரும் சிக்கல் ஏற்பட்டது.தற்போதைய புதிய கல்வி ஆண்டிலும் இன்னும் பள்ளிகள், கல்லுாரிகளை திறந்து வகுப்புகளை நடத்த முடியவில்லை. நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான வகுப்புகள் தாமதமாகியுள்ள நிலையில் குறிப்பிட்ட காலத்துக்குள் பாடங்களை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


*♦💲♦பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வும் முதல் பருவ தேர்வும் இன்னும் நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில் மட்டும் பருவ இடைத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளது. உயர்நிலை படிப்புகளான இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பிளஸ் 2 பாடங்களே அடிப்படை என்பதால் அந்த பாடங்களை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நிலை உள்ளது.


*♦💲♦எனவே பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவும் மாணவர்களுக்கு பல்வேறு திருப்புதல் தேர்வுகள் நடத்தவும் கூடுதல் அவகாசம் தேவை. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை மார்ச்சுக்கு பதில் மே மாத கடைசி அல்லது ஜூனுக்கு தள்ளி வைக்கலாமா என பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.இது குறித்து நிபுணர் குழு அமைத்து விரிவாக ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.


*⭕💲⭕என்.டி.ஏ.,விடம் ஆலோசனை:


*♦💲♦பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளில் சேர 'நீட், ஜே.இ.இ., நாட்டா, கியூசெட்' என பல்வேறு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளை மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. நடத்துகிறது. நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு நுழைவு தேர்வுகளை எப்போது நடத்துவது என என்.டி.ஏ. இன்னும் முடிவு செய்யவில்லை.


*♦💲♦நுழைவு தேர்வுகளின் தேதிகள் தள்ளி போகும் நிலையில் பிளஸ் 2 தேர்வுகளையும் தள்ளி வைக்க முடியும். இது குறித்து தமிழக கல்வி அதிகாரிகள் என்.டி.ஏ.விடம் ஆலோசனை பெறவும் திட்டமிட்டுள்ளனர்.

9 comments:

  1. First open the school then proceed like this

    ReplyDelete
    Replies
    1. ST.XAVIER'S ACADEMY,
      NAGERCOIL, CELL:8012381919.
      TNEB Accountant- Online class
      STUDY MATERIALS AVAILABLE.
      1. Unit wise study material
      2. Concept wise explanation
      3. Multiple choice questions
      4. Answer with explanation
      5. Total 1046 pages

      Delete
  2. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 ல் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் TET மதிப்பெண் அடிப்படையில் 5,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    வயதை கணக்கிட்டும் வாய்ப்பு வழங்க கோரிக்கை


    கடந்த 2013ம் ஆண்டு மற்றும் 2017,2019ம்
    ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி
    பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பிட்
    மற்றும் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்
    அடிப்படையில் வெயிட்டேஜ் கணக்கிட்டு
    பணி வழங்கப்பட்டது. இதனால், 25
    ஆண்டுக்கு முன்னர் படித்த பலருக்கும்,
    ஆசிரியர் பணி கிடைக்காமல் ஏமாற்றம்
    டைந்தனர். இவர்களில் பலர், வயது
    மூப்பை எட்டியுள்ள நிலையில், இன்னமும்
    அரசுப்பணி கிடைக்காமல் காத்திருக்கின்ற
    னர். எனவே, தற்போதாவது அவர்களுக்கு
    TET மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
    எழுந்துள்ளது.

    ReplyDelete
  3. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 ல் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் TET மதிப்பெண் அடிப்படையில் 5,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    வயதை கணக்கிட்டும் வாய்ப்பு வழங்க கோரிக்கை


    கடந்த 2013ம் ஆண்டு மற்றும் 2017,2019ம்
    ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி
    பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பிட்
    மற்றும் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்
    அடிப்படையில் வெயிட்டேஜ் கணக்கிட்டு
    பணி வழங்கப்பட்டது. இதனால், 25
    ஆண்டுக்கு முன்னர் படித்த பலருக்கும்,
    ஆசிரியர் பணி கிடைக்காமல் ஏமாற்றம்
    டைந்தனர். இவர்களில் பலர், வயது
    மூப்பை எட்டியுள்ள நிலையில், இன்னமும்
    அரசுப்பணி கிடைக்காமல் காத்திருக்கின்ற
    னர். எனவே, தற்போதாவது அவர்களுக்கு
    TET மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
    எழுந்துள்ளது.

    ReplyDelete
  4. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை என்பது ஆசிரியர் தகுதிதேர்வின் அர்த்தத்தை இழக்க
    செய்துவிடும். மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 ல் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ள
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் TET மதிப்பெண் அடிப்படையில் 5,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    வயதை கணக்கிட்டும் வாய்ப்பு வழங்க கோரிக்கை


    கடந்த 2013ம் ஆண்டு மற்றும் 2017,2019ம்
    ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி
    பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பிட்
    மற்றும் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்
    அடிப்படையில் வெயிட்டேஜ் கணக்கிட்டு
    பணி வழங்கப்பட்டது. இதனால், 25
    ஆண்டுக்கு முன்னர் படித்த பலருக்கும்,
    ஆசிரியர் பணி கிடைக்காமல் ஏமாற்றம்
    டைந்தனர். இவர்களில் பலர், வயது
    மூப்பை எட்டியுள்ள நிலையில், இன்னமும்
    அரசுப்பணி கிடைக்காமல் காத்திருக்கின்ற
    னர். எனவே, தற்போதாவது அவர்களுக்கு
    TET மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
    எழுந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Daiiii 2017 2019 batch oru posting kuda podala da.... 2013 batch ku 15000 posting pottangada.....

      Delete
    2. Dai aramental naaye yeda uyira vagra oru indha comments ah yega parum yevlo time da podra paradhesi

      Delete
  5. Iavankalukku posting kodukka koodathu imsaikal

    ReplyDelete
  6. பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்ச்சி முடிவு எப்போது வெளியிடப்படும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி