மருத்துவக் கலந்தாய்வு 17-ம் தேதி தொடக்கம்?- தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2020

மருத்துவக் கலந்தாய்வு 17-ம் தேதி தொடக்கம்?- தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம்

 


தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு 17-ம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கரோனா தொற்று மற்றும் ஊரடங்கின் காரணமாகவும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு காரணமாகவும் தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு தள்ளிப் போயுள்ளது.


இதற்கிடையே நவ.3-ம் தேதி முதல் நேற்று (நவ.12-ம் தேதி) மாலை 5 மணி வரை மாணவர்கள் ஆன்லைனில் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர். நவ.16-ம் தேதி தரவரிசைப் பட்டியல்  வெளியாக உள்ளது. அரசு ஒதுக்கீட்டில் 21,154 இடங்களும் நிர்வாக ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்காக 14,078 இடங்களும் என ஒட்டுமொத்தமாக 38,232 மாணவர்கள் மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வில் சுமார் 57 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், சுமார் 19 ஆயிரம் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவில்லை.

இதற்கிடையே கலந்தாய்வுக்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இந்நிலையில் மாணவர்களின் தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்றும், 17-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிறப்புப் பிரிவினருக்கு 17-ம் தேதியும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 18-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

பொதுப் பிரிவினருக்கு 19-ம் தேதி கலந்தாய்வு தொடங்க உள்ளதாகவும் மருத்துவக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி