வேளாண்மை பல்கலைக்கழக ஆன்லைன் கலந்தாய்வு இன்று திட்டமிட்டப்படி நடக்கும் -துணைவேந்தர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2020

வேளாண்மை பல்கலைக்கழக ஆன்லைன் கலந்தாய்வு இன்று திட்டமிட்டப்படி நடக்கும் -துணைவேந்தர்

 


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று திட்டமிட்டப்படி நடக்கும் என பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டிற்கு இளங்கலை மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவுக்கான இடஒதுக்கீட்டு கலந்தாய்வு இன்று முதல் 28ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூன்று நாட்களில் இருந்து 6 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் டிசம்பர் 1-ம் தேதி வரை ஆறு நாட்கள்கலந்தாய்வு நடக்கிறது. ஒவ்வொரு நாளும் 600 மாணவர்கள் அழைக்கப்படுவர். மேலும், டிசம்பர் 15ம் தேதி முதல் நகர்வு மற்றும் இரண்டாம் கட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு இணையவழியில் நடக்கும். இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது.


இதில், தற்காலிக இடஒதுக்கீட்டிற்கான கடிதம் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும், டிசம்பர் 29ம் தேதி வேளாண் தொழில்நிறுவனங்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடும், 30ம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடுகள் வழங்கப்படும். பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக கலந்தாய்வு தேதிகளில் மாற்றங்கள் இல்லை எனவும், திட்டமிட்டபடி இன்று ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “கவுன்சலிங் ஆன்லைனில்தான் நடக்கிறது. மேலும், 3 நாட்கள் நடக்கவிருந்த கவுன்சலிங் தற்போது புயல் காரணமாக 6 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, கலந்தாய்வு திட்டமிட்டப்படி நாளை (இன்று) நடக்கும்” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி