தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை தரவரிசை வரம்பு வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2020

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை தரவரிசை வரம்பு வெளியீடு

 


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மாணவர் சேர்கைக்கான தரவரிசை வரம்பு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஆன்லைன் முதற்கட்ட கலந்தாய்விற்கான தரவரிசை வரம்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவில் 1 முதல் 10,755 வரையும், பிற்படுத்தப்பட்டோர் (பி.சி) 1 முதல் 10,797 வரை, பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர் (பி.சி முஸ்‌லிம்) 1 முதல் 23,413 வரை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 1 முதல் 10,798, ஆதிதிராவிடர் 1 முதல் 16,791, அருந்ததியர் 1 முதல் 20,186 வரை, பழங்குடியினர் 1 முதல் 24,509 வரை நடக்கிறது. 


மேலும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு டிசம்பர் 2ம் தேதி இணையதளம் மூலம் அறிவிக்கப்படும்.  மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம், மாணவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் மூலம் தெரிவிக்கப்படும் என முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி