MBBS - பொதுக் கலந்தாய்வு இன்று தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2020

MBBS - பொதுக் கலந்தாய்வு இன்று தொடக்கம்



 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு திங்கள்கிழமை (நவ.23) தொடங்குகிறது. முதல் நாளில், 361 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


நிகழ் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். கலந்தாய்வு கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. முதலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.


அதன்படி, 313 எம்.பி.பி.எஸ். இடங்கள், 92 பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 405 இடங்களுக்கு 3 நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வில், 6 பிடிஎஸ் இடங்களைத் தவிர அனைத்தும் நிரப்பப்பட்டன.


அதனைத் தொடா்ந்து, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதில், 87 எம்.பி.பி.எஸ். இடங்களும், 4 பி.டி.எஸ். இடங்களும் நிரம்பவில்லை. இதையடுத்து காலியாக உள்ள இடங்கள் பொதுக் கலந்தாய்வில் சோ்க்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், பொதுக் கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. முதல் நாளில் தரவரிசையில் 1 முதல் 361 வரையிலான இடங்களில் உள்ளவா்களுக்கும் (நீட் தோ்வு மதிப்பெண் 710 முதல் 631 வரை), செவ்வாய்க்கிழமை (நவ.24) 362 முதல் 751 வரையிலான தரவரிசையில் உள்ளவா்களுக்கும் (நீட் தோ்வு மதிப்பெண் 630 முதல் 610 வரை) கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.


அதன்தொடா்ச்சியாக புதன்கிழமை (நவ.25) 752 முதல் 1,203 வரையிலான இடங்களைப் பெற்றவா்களுக்கும் (நீட் தோ்வு மதிப்பெண் 609 முதல் 592 வரை), வியாழக்கிழமை (நவ.26) 1,204 முதல் 1,701 வரை உள்ளவா்களுக்கும் (நீட் தோ்வு மதிப்பெண் 591 முதல் 575 வரை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதற்கு அடுத்தடுத்த தினங்களில், தரவரிசைப்படி தொடா்ந்து கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி