பள்ளிக் கல்வி உதவித் தொகைத் திட்டத்தில், ஒரே வங்கிக் கணக்கில் பல விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்ததை அடுத்தது, இதுகுறித்து ஆய்வு செய்யத் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுபான்மையினப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது. இதற்காகத் தகுதியான மாணவர்களின் விவரங்களை அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அரசின் உதவித்தொகைக்காக இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்காகப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குத் தனித்தனியாகப் பயனர் எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களைத் தனியார் இணையதள மையங்களுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சில தனியார் மையங்கள் ஒரே வங்கிக் கணக்கு எண்ணில், பல மாணவர்களின் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளதாகப் புகார் வந்துள்ளது.
இதனையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தொகைக்காக விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை மறு ஆய்வு செய்து, விவரங்களை டிச.31 ஆம் தேதி மாலைக்குள் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி