அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2021

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...


2020-2021ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கு பெயர்ப்பட்டியல் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து , கடந்த மார்ச் 2020 - ல் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு தயாரிக்கப்பட்ட பெயர்ப் பட்டியலினை ( Nominal Roll ) அடிப்படையாகக் கொண்டு , 2020-2021 ஆம் கல்வியாண்டின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. 


எனவே , இது குறித்தான பின்வரும் அறிவுரைகளை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 27.01.2021 பிற்பகல் முதல் 01.022021 வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி 2020-2021- ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள தங்களது பள்ளி மாணாக்கரின் நிரந்தரப் பதிவெண் , பெயர் , பிறந்ததேதி , பாடத்தொகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


+2 NR Preparation 2021 - DGE Proceedings Download here...



1 comment:

  1. இப்போது ஏன் தமிழ்நாடு அரசு , விளம்பரத்திற்காக 2,000 கோடிக்கு மேல் செலவழிக்கிறது??????????? இந்த பணம் ஏழை மக்கள் வரி பணம். இப்போது மக்கள் கொரோனா காரணமாக அன்றாட வாழ்க்கைக்காக போராடுகிறார்கள், ஆனால் அரசாங்கம் தேவையின்றி செலவிடுகிறது
    ., தமிழ்நாடு மக்கள் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் அரசாங்கத்தின் விளம்பரங்களைப் பார்ப்பதை வெறுக்கிறார்கள், ஏனெனில் 10 ஆண்டுகளில் (2011-2021) இருந்து வேலைவாய்ப்பு பிரச்சினைகளுக்கு அரசு எதுவும் செய்யவில்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி