குரூப் - 1 தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2021

குரூப் - 1 தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., உத்தரவு

 

குரூப் - 1 பிரதான தேர்வு எழுத உள்ளவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்' என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:'குரூப் - -1' பிரிவில் அடங்கிய பதவிகளுக்கு முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பிரதான தேர்வுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.


பிப். 16ம் தேதி முதல் மார்ச் 15க்குள் அரசு கேபிள் 'டிவி' நடத்தும் 'இ- - சேவை' மையங்கள் வழியே அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து டி.என்.பி.எஸ்.சி.க்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை ஒரு முறை பதிவேற்றம் செய்து இணைத்தால் மட்டுமே அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும்.


பிரதான தேர்வுக்கு கட்டண விலக்கு கேட்காதவர்கள் தங்களின் தேர்வு கட்டணமாக 200 ரூபாயை மார்ச் 15க்கு முன் செலுத்த வேண்டும்.அதன்பிறகே தங்களின் சான்றிதழ்களை பதிவேற்ற முடியும்.டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள சான்றிதழ்களை குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவேற்றாவிட்டால் பிரதான எழுத்து தேர்வில் பங்கேற்க விருப்பமில்லை எனக்கருதி விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி