பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் -பள்ளிக்கல்வித்துறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2021

பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் -பள்ளிக்கல்வித்துறை.

 

நாளை மறுநாள் முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளதால் பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கல்லூரிகள், பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் 40% குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்கவுள்ளதால் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடதப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டடது.

சமீபத்தில் பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதில் வரும் பிப்ரவரி 8-ஆம்தேதி (அதாவது நாளை மறுநாள்) 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கலாம் என அரசு அறிவித்தது. இந்நிலையில், நாளை மறுநாள் முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

3 comments:

  1. இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்த ஆட்சியில் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் லட்சத்தை ஒட்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்த ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் கால்வயிற்றுக்கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் வெறும் 7700-ஐ வைத்துக் கொண்டு பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.

    ReplyDelete
  2. This is the first time I am going to vote for Dmk ...No mercy on Admk ..They blame tet candidates..worst educational minister I have ever seen

    ReplyDelete
  3. இனிமே கல்வி செய்து பார்ப்பதற்கு யாருமே இல்ல போல அனாதையாக தான் இருக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி