அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 6 மாத நிலுவை ஊதியம், 14 மாத நிலுவை ஓய்வூதியம் தர அனுமதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2021

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 6 மாத நிலுவை ஊதியம், 14 மாத நிலுவை ஓய்வூதியம் தர அனுமதி.


புதுச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஆறு மாத நிலுவை ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்குக் கடந்த 14 மாத நிலுவை ஓய்வூதியமும் தர ரூ.27.85 கோடியை விடுவிக்க ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஒப்புதல் தந்துள்ளார்.

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 35 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் என 450 பேர் பணிபுரிகின்றனர். ஓய்வூதியர்கள் 350 பேர் உள்ளனர். மொத்தம் 800 குடும்பத்தினருக்கு ஊதியம், ஓய்வூதியம் கடந்த 14 மாதங்களாகத் தரப்படவில்லை. இது தொடர்பான கோப்பு உயரதிகாரிகளால் பல முறை திருப்பி அனுப்பப்பட்டது. அப்போதைய ஆளுநர் கிரண்பேடியும் கோப்பினைத் திருப்பி அனுப்பினார். இதனால் ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் அண்மையில் துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்ற தமிழிசை, அவர்களை அழைத்துப் பேசினார். அதைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குத் தரப்படும் நிதியுதவி பற்றி ஆலோசனை நடத்தினார். அதையடுத்து புதுச்சேரி பள்ளிக்கல்வி சட்டத்தையும் அதன் விதிகளையும் ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.


ஊதியத்துக்காக கல்வித்துறை முன்பு ஆசிரியர்கள் நடத்திய போராட்டம்- கோப்புப் படம்

இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியங்கள் கடந்த 14 மாதங்களாகத் தரப்படவில்லை என்ற நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கு விரைவில் தீர்வு காணவும், ஊதியம், ஓய்வூதியங்களைத் தரலாம் என்றும் ஆளுநர் அனுமதி தந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இன்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பிறப்பித்துள்ள உத்தரவில், "கடந்த ஜனவரி 2020 ஆண்டு முதல் பிப்ரவரி 2021 வரை 14 மாதங்களுக்கு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள 35 அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியமும், கடந்த செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை ஆறு மாதங்களுக்குப் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியமும் தரப்படும். இதற்காக ரூ. 27.85 கோடிக்கான பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் செலவிடத் திட்டத்துக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. PG TRB 2021
    *Online Test Series*
    Unit wise Micro & Macro Tests

    *ALL SUBJECTS*
    *Pattern: தமிழ் & English*

    Starts From :
    *March*
    15.03.2021(Monday)

    To
    *JUNE*
    18.06.2021 (Friday)

    (ALL SUBJECTS + EDUCATION + GK) தமிழ்,English,Maths,
    Physics,Chemistry,Botany,
    Zoology,Commerce,
    Economics, History, Computer Instructor, Geography, Physical Education & Political Science

    ALL SUBJECTS LIVE ONLINE CLASSES AVAILABLE
    *For Booking:*
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    *Contact:* 9976986679
    6380727953

    ReplyDelete
  2. PG TRB 2021
    CHEMISTRY , MATHEMATICS, TAMIL, COMPUTER INSTRUCTOR CLASSES WILL STARTS SOON,
    CLASSES ON SATURDAY & SUNDAY ONLY AT CHENNAI. FURTHER CONTACT TO 9884678645

    ReplyDelete
  3. PG TRB CHEMISTRY CLASSES GOING AT NAGERCOIL. FURTHER CONTACT TO 9884678645

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி