வாக்குப் பதிவு தினத்தில் ஊதியத்துடன் விடுப்பு: தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2021

வாக்குப் பதிவு தினத்தில் ஊதியத்துடன் விடுப்பு: தமிழக அரசு அறிவிப்பு


 வாக்குப் பதிவு தினத்தில் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டுமென தனியாா் நிறுவனங்களை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


இதுகுறித்து, தொழிலாளா் நலத் துறை ஆணையரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


தமிழகத்தில் சட்டப் பேரவை பொதுத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அனைத்துத் தரப்பினரும் வாக்களிக்க வசதியாக அன்றைய தினத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொவில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக் கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தனிக்கூலி, தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆகியோருக்கு விடுப்பினை அளிக்க வேண்டும்.


கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும். விடுப்பு விடப்பட்டாலும் அன்றைய தினத்துக்கான ஊதியமானது அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டுமென தொழிலாளா் நலத் துறை ஆணையரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி