அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் , கூடுதல் கல்வித் தகுதி பட்டம் பெற்று ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாதவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2021

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் , கூடுதல் கல்வித் தகுதி பட்டம் பெற்று ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாதவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு.



அரசாணையில் , கூடுதல் கல்வித் தகுதிக்கு , வழங்கப்படும் முன் ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது . பார்வை ( 2 ) -ல் காணும் அரசாணையில் , ஆசிரியப்பணியாளர்களுக்கும் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும் முன் ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , அவ்வரசாணையில் , 10.03.2020 - க்கு முன்னதாக கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு , அரசு நிதித்துறை ஒப்புதலின் அடிப்படையில் , சம்மந்தப்பட்ட நிர்வாகத்துறை அனுமதி வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 10.03.2020 - க்கு முன்னர் , தங்கள் கல்லூரிகளில் , அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து , ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் , கூடுதல் கல்வித் தகுதி M.Phil | Ph.D பட்டம் பெற்று ( PB - 3 ( Rs.15600-39100 + AGP 6000/7000 / 8000 என்ற ஊதியக்கட்டில் அல்லது நிலை 10,11,12 - ல் ஊதியம் பெற்றுவரும் ) ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாத ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உரிய விதிமுறைகளின்படி , முதல்வர் நிலையில் கூர்ந்தாய்வு செய்து , பட்டச்சான்றின் மெய்த்தன்மை அறிக்கையுடன் 18.03.2021 - க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி