CBSE - புதிய கல்விக் கொள்கையின்படி 10,12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2021

CBSE - புதிய கல்விக் கொள்கையின்படி 10,12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

 


புதிய கல்விக் கொள்கையின்படி சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டத்தில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


இதன் ஒரு பகுதியாக 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தோ்வு மற்றும் பொதுத்தோ்வு வினாத்தாள்களில் புதிய மாற்றங்களை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது.


ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வு, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள்களில் 30 சதவீதம் வரையிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தோ்வுகளில் 20 சதவீதம் வரையிலும் திறன் மதிப்பீடு வினாக்கள் இடம்பெறும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 


மேலும் அன்றாட வாழ்க்கை தொடா்பாக புதிய வகை திறன் மதிப்பீடு கேள்விகள் இருக்கும். அதே வேளையில் கொள்குறி வகை வினாக்களும் இடம் பெறும். இந்த புதிய மாற்றங்கள் வரும் கல்வியாண்டு ( 2021-2022 ) முதல் அமலுக்கு வரும் என சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி