வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2021

வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு.

 

அரபிக் கடலில் உருவான 'டாக்டே' புயல், கடந்த, 17ம் தேதி நள்ளிரவு குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கும், டையு, உனா பகுதிக்கும் இடையே கரையை கடந்தது.இந்நிலையில், வங்கக் கடல் பகுதியில், புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து, வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 22ம் தேதி, வடக்கு அந்தமான் கடலுக்கும், வங்கக் கடல் பகுதிக்கும் இடையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.பின், அது படிப்படியாக தீவிரமடைந்து, அடுத்த 72 மணி நேரத்தில் புயலாக மாறலாம். இதனால், வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில், அந்தமான் நிகோபார் தீவுகளின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யலாம். பின், வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வரும், 26ம் தேதி மாலை, ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதிகளை, இந்த புயல் சென்றடையலாம். ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், 25ம் தேதி மாலை முதல் கன மழை துவங்கும். 27ம் தேதி, புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வரும், 21ம் தேதி, தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி