எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்? வகை வாரியாக ஜூலை 5 வரையிலான வழிகாட்டு நெறிமுறைகள் : முழு விவரம் .... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2021

எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்? வகை வாரியாக ஜூலை 5 வரையிலான வழிகாட்டு நெறிமுறைகள் : முழு விவரம் ....

 


எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்?  வகை வாரியாக ஜூலை 5 வரையிலான வழிகாட்டு நெறிமுறைகள் :

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரையில் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


தளர்வுகள் என்ன?


வகை மூன்றில் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கான தளர்வுகள்


>திரையரங்குகளில் வட்டாட்சியர் அனுமதி பெற்று வாரத்தில் ஒருநாள் பராமரிப்பு பணி செய்யலாம். 


>இனிப்பு, கார வகை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படலாம். 


>பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களில் காலை 6 முதல் 9 வரை மட்டும் நடைபயிற்சிக்கு அனுமதி. 


>பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம்


>அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதியின்றி 50% பணியாளர்களுடன் செயல்படலாம்


>கட்டுமான நிறுவனங்கள் 33% தொழிலாளர்களுடன் செயல்படலாம் என அறிவிப்பு


>இதர தொழிற்சாலைகள் 33% தொழிலாளர்களுடனும், ஐ.டி.சேவை நிறுவனங்கள் 20% பணியாளர்களுடன் செயல்படலாம்


>ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்படலாம்


>தனியார் நிறுவனங்கள், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி


>அரசின் அத்தியாவசிய துறைகள் 100%, இதர துறைகள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம்


>வாகன விற்பனை, பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9 முதல் இரவு 7 மணி வரை அனுமதி


>வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் கடைகளும் காலை 9 முதல் இரவு 7 வரை செயல்படலாம்


>பாத்திரக் கடைகள், ஃபேன்சி கடைகள், அழகுசாதன கடைகள் காலை 9 முதல் இரவு 7 வரை அனுமதி


>கட்டுமான பொருட்கள், காலணி கடைகள் காலை 9 முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்


>சாலையோர உணவகங்களில் காலை 6 முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதி


>கணினி, மென்பொருள்கள், மின்னணு சாதனக் கடைகள் காலை 9 முதல் மாலை 7 வரை செயல்படலாம்


>வாகன உதிரிபாகம், செல்பேசி விற்பனை செய்யும் கடைகள் காலை 9 முதல் மாலை 7 வரை அனுமதி


>கல்விப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 முதல் மாலை 7 வரை அனுமதி


>ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி


>மின் பொருட்கள், கேபிள்கள் விற்கும் கடைகள் காலை 9 முதல் மாலை 7 வரை செயல்பட அனுமதி


வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங்களுக்கான தளர்வுகள்:


அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும். 


>பாத்திரக்கடைகள், ஃபேன்சி, அழகு சாதனப் பொருள், ஃபோட்டோ, வீடியோ கடைகள் காலை 9 - இரவு 7 மணி வரை செயல்படலாம்


>மாவட்டத்திற்குள் பொதுப் பேருந்து போக்குவரத்திற்கு 50% பயணிகளுடன் அனுமதி


>மாவட்டங்களுக்கு இடையே விதிகளுக்குட்பட்டு 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி


>சாலையோர உணவுக் கடைகள், பார்சல் சேவை காலை 6 முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி


>கட்டுமானப் பணிகளை 50% பணியாளர்களுடன் மேற்கொள்ள அரசு அனுமதி


>கணினி, மின்னணு சாதன உதிரிபாக கடைகள் காலை 9 முதல் இரவு 7 வரை செயல்படலாம்


>செல்பேசி மற்றும் அது சார்ந்த கடைகள் காலை 9 முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்


வகை ஒன்றில் உள்ள 11 மாவட்டங்களுக்கான தளர்வுகள்:


கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் இதில் அடங்கும். 


>திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ், இ-பதிவு இல்லாமல் பயணிக்க அனுமதி


>தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி


>அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 முதல் 9 வரை நடைபயிற்சி செய்ய அனுமதி


>அருங்காட்சியகங்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் காலை 10 முதல் மாலை 5 வரை அனுமதி


>உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் ஏசி வசதியின்றி 50% நபர்களுடன் செயல்படலாம்


>வீட்டு வசதி நிறுவனம், வங்கிசாரா நிறுவனங்கள், குறுநிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்


>ஐ.டி., ஐ.டி. சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி


>இதர தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி


>வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி


>அனைத்து அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி


>மின்பணியாளர், பிளம்பர், கணினி மற்றும் இயந்திர பழுதுநீக்குவோர், தச்சர் ஆகியோர் வீடுகளுக்கு சென்று பணியாற்ற இ-பதிவின்றி அனுமதி


>தனியார் பாதுகாப்பு சேவை மற்றும் அலுவலகங்கள், வீடுகள் பராமரிப்பு சேவை இ-பதிவின்றி செயல்பட அனுமதி


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி