முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையத்தளம் புதிதாக தொடக்கம்: புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2021

முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையத்தளம் புதிதாக தொடக்கம்: புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை

 

தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. www.cmcell.tn.gov.in/register.php என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. முதல்வரின் தேர்தல் பிரசாரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. 

இத்துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை கண்காணிக்கவும் அதற்கான நடவடிக்கை எடுக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. Super, same website found last April, that is called old website? Fentastic Great... please Post tnschool emis and e learning etc new website launched... Keep it up... I realised how the history redirect past two thousand years... Great humanist...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி