விரைவில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பதற்கு மத்திய அரசிடம் நிபுணர்கள் பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2021

விரைவில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பதற்கு மத்திய அரசிடம் நிபுணர்கள் பரிந்துரை

 

மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வந்து படிப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்க்குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.


குறைந்த அளவிலான மாணவர்கள் வரும் வகையில் நேரத்தை மாற்றியமைத்தும் குறைத்தும் ஒருநாள் விட்டு ஒருநாளும் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறக்கலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றால் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா இரண்டாவது அலை பின்வாங்குவதால் பல்வேறு மாநில அரசுகளும் பள்ளிமற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


இந்நிலையில் ஹைதராபாத்தில் முழு அளவில் ஊரடங்கு நீக்கப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஜூலை 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதால் இங்குள்ள கல்லூரிகள் மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதிலும் மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதிலும் ஈடுபட்டுள்ளன

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி