கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஜூன் 11ல் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய கட்டுப்பாடுடன் கூடிய விதிகள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஐயா வணக்கம், ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி கல்வித்துறையில் எந்த வேலை இருந்தாலும் தரலாம். எந்த வேலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். தயவு செய்து முயற்சி எடுக்கவும். அல்லது அனைத்து ஆசிரியர்களுக்கும் 10 அல்லது 15 ஆயிரம் சம்பளத்தில் பணியமர்த்தினால் கூட நன்கு வேலை செய்வார்கள். அல்லது அனைத்து துறைகளிலும் கொரோனா தடுப்பு பணியையும் மேற்கொள்ளவும் தயாராக இருக்கின்றோம். கொரோனா தடுப்பு பணியில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு ஆசிரியரை நியமிக்கலாம். அவர்களுக்கு தனியாக சுத்தம் சுகாதாரம் மாணவர்களிடத்தில் கற்று தர சொல்லலாம். அவர்களுக்கு வேளாண்மை பயிற்சி அளித்து வேளாண்மை ஆசிரியராக பணியமர்த்த லாம் அல்லது நூலக ஆசிரியராகவும் பணியமர்த்தலாம். இனிமேல் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதுபவர்களுக்கு 90 மேல் மதிப்பெண் எடுத்தால் வேலை என அறிவியுங்கள். அப்பொழுது தான் சரியான நடைமுறை இருக்கும்
ReplyDeleteநன்றி கண்ணீருடன்
Reply