பள்ளி கல்வி துறையில் புகாரில் சிக்கிய அதிகாரிகளுக்கு இடமாறுதல், கட்டாய காத்திருப்பு.? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2021

பள்ளி கல்வி துறையில் புகாரில் சிக்கிய அதிகாரிகளுக்கு இடமாறுதல், கட்டாய காத்திருப்பு.?

 

பள்ளி கல்வி துறையில் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள அதிகாரிகளை பதவியிறக்கம் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் வைக்க பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது. 


தி.மு.க., அரசு பதவியேற்றது முதல் பள்ளி கல்வி துறையில் மாற்றங்கள் நடந்து வருகின்றன. முதலில் இயக்குனர் பதவியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டார். பின்னர் பள்ளி கல்வி இயக்குனரகத்தில் பணியாற்றிய மாற்று பணி ஊழியர்கள் கூண்டோடு இடமாற்றம் போன்ற அடுக்கடுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


இதை தொடர்ந்து பள்ளி கல்வி துறை புதிய செயலராக காகர்லா உஷா நியமிக்கப்பட்ட பின், பள்ளி கல்வி அதிகாரிகளுக்கான இடமாற்றங்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர்களான இரண்டு சி.இ.ஓ.,க்கள் மட்டும் இடமாற்றப்பட்டனர்.இந்நிலையில் பள்ளி கல்வி துறையில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் சி.இ.ஓ.,க்கள் உள்ளிட்டோரின் பட்டியலை பள்ளி கல்வி துறை தயாரித்துள்ளது. இவர்களில் அதிக புகாருக்கு ஆளானவர்களை முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 


இந்த ஆலோசனையில்இடமாற்றத்துடன் பதவியிறக்கமும் வழங்கலாம் என உயர் மட்ட அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், சி.இ.ஓ.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம்செய்யப்படுவர் என்றும், சிலருக்கு பதவியிறக்கம்இருக்கலாம், சிலர் கட்டாய காத்திருப்பில் வைக்கப்படலாம் என்றும் பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி