தமிழகத்தில் 58 ஆயிரம் நவீன மயமாக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2021

தமிழகத்தில் 58 ஆயிரம் நவீன மயமாக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

 

அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகள் நிதி நிலைக்கே ஏற்ப மத்திய - மாநில அரசுகளின் நிதி உதவியோடு நவீன மயமாக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மனப்பாறையை அடுத்த கொடும்பபட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அரசு பள்ளிக்கு சுற்று சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.


பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகநிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும் என்று நிதிஅமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். 120 கல்வி மாவட்டங்களில் மாதிரி பள்ளி கொண்டு வர வேண்டும் என்றும் நிதிஅமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம். பள்ளிக்கல்வி துறையின் மாணவ - மாணவிகளின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து வரும் கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிப்பார். தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகள் நிதி நிலைக்கே ஏற்ப மத்திய - மாநில அரசுகளின் நிதி உதவியோடு நவீன மயமாக்கப்படும் என்று அவர் கூறினார்.

4 comments:

  1. Admin, look at the title please.

    ReplyDelete
  2. Thalaiva Alosanai seidhu mudivedukkappadum.ngradha solla marandhutta...

    ReplyDelete
  3. Puthagasalai admin Allakaigal: Swetha, Revathi Bala, Murali...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி